Saturday, April 18
Shadow

ஓவர் பந்தா காட்டும் சாய்பல்லவி பிரபல ஹீரோ குற்றசாட்டு

மலையாளத்தில் ப்ரேமம் படம் மூலம் அறிமுகமானவர் சாய்பல்லவி தன் முதல் படத்திலே தமிழ் மலையாளம் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் பிரபலமானார் அனால் தமிழில் இது வரை வாய்ப்பு இல்லாமல் இப்போது தான் வாய்ப்பு கிடைத்து கரு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார் .

சாய் பல்லவி ஓவர் பந்தா செய்கிறார் என தடாலடியாக அவர் மீது புகார் கூறியிருக்கிறார். ஹீரோ நாக சவுர்யா. கரு படத்தில் சாய் பல்லவி நடித்து வருகிறார். இப்படம் தெலுங்கிலும் உருவாகிறது. இதனால் தெலுங்கு நடிகர் நாக சவுர்யா இதில் ஹீரோவாக நடிக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் சாய் பல்லவி அளப்பறைகள் செய்வதாக அவர் புகார் கூறியிருக்கிறார்.

இது குறித்து நாக சவுர்யா கூறியதாவது: சாய் பல்லவி இப்போதுதான் சினிமாவுக்கு வந்திருக்கிறார். ஒரு சில படங்கள்தான் நடித்திருப்பார். அதற்குள் தன்னை ஸ்டாராக நினைத்து கொண்டு நடந்துகொள்கிறார். அவரது செயல்களை வைத்துதான் இதை சொல்கிறேன் என்றார். ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது சாய் பல்லவியால் கடுப்பான நாக சவுர்யா ஸ்பாட்டிலிருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன் தெலுங்கு படத்தில் சாய்பல்லவி நடித்தபோது, ஹீரோ நானியும் ஷூட்டிங்கிலிருந்து வெளியேறினார். சாய்பல்லவி ஷூட்டிங்கிற்கு வர தாமதம் செய்வதே இதற்கு காரணமாக கூறப்பட்டது.

Leave a Reply