மகன் விஜித்தை அறிமுகம் செய்யும் தங்கர்பச்சானின் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்
பிரபல டைரக்டர் தங்கர்பச்சான் டைரக்ட் செய்யும் படத்தில் அவரது மகன் நாயகனாக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தை மனிதநேய அறக்கட்டளை நிறுவனர் திரு. சைதை துரைசாமி அவர்கள் காமிராவை இயக்கி தொடங்கி வைத்தார்.
பல்வேறு மொழிகளில் நாற்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பின் அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு களவாடியப் பொழுதுகள் போன்ற பரபரப்பான திரைப்படங்களை இயக்கியவர், தங்கர் பச்சான். பார்த்திபன், சத்யராஜ்,சேரன், பிரபுதேவா போன்றவர்களை முற்றிலும் மாறுபட்ட வடிவத்தில் கதைநாயகர்களாக வாழ வைத்த இவர், தற்பொழுது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் அவரது மகன் விஜித் பச்சானை நாயகனாக அறிமுகம் செய்கிறார்.
கிராமத்து பின்னணியில் அழுத்தமான படைப்புக்களை உருவாக்கிய தங்கர் பச்சான் இம்முறை சென்னை நகரத்தை மையமாக கொண்ட, முற்றிலும் மாறுபட்ட முழு பொழுதுபோக்கு அம்சங்கள்...