சொன்ன தேதியிலும், நிர்ணயிக்கப்பட்ட தொகையிலும் ‘தப்பு தண்டா’ படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீகண்டன்
'தப்பு தண்டா' என்ற படத்தின் பெயரை கேட்டவுடன், வெறும் குற்றமும், களவாணித்தனமும் தான் இருக்கும் என யாரும் எண்ணிவிட வேண்டாம். ரசிகர்களின் ரசனைகளுக்கு ஏற்றவாறு கிரைம் கலந்த நகைச்சுவை திரில்லர் படமாக தயாராகி உள்ளது, இயக்குனர் சிகரம் பாலு மகேந்திராவின் சீடரான ஸ்ரீகண்டன் இயக்கி இருக்கும் இந்த 'தப்பு தண்டா' திரைப்படம். தயாரிப்பாளர் சத்ய மூர்த்தி தயாரித்து வரும் 'தப்பு தண்டா' படத்தின் படப்பிடிப்பானது முழுவதுமாக முடிவடைந்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் A வினோத், இசையமைப்பாளர் நரேன் பாலகுமார், படத்தொகுப்பாளர் SP ராஜ சேதுபதி ஆகியோர் பணியாற்றி வரும் இந்த 'தப்பு தண்டா' படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது மும்மரமாக நடைபெற்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
"ஒரு திரைப்படத்தை சொன்ன தேதியிலும், சொன்ன தொகையிலும் முடித்து கொடுப்பது தான் ஒரு சிறந்த இயக்குனருக்கு அழகு...." என்று என்னுடைய குருநாதர் ...
