கோவையில் ஒலிக்கப் போகும் அடுத்த இசை நட்சத்திரத்தின் குரல்! செப்டம்பர் 6-ல் ‘தமிழ் ஐடல்’ பிரம்மாண்ட குரல் தேர்வு
கோவையில் ஒலிக்கப் போகும் அடுத்த இசை நட்சத்திரத்தின் குரல்! செப்டம்பர் 6-ல் ‘தமிழ் ஐடல்’ பிரம்மாண்ட குரல் தேர்வு
தமிழகத்தின் அடுத்த தலைமுறை இசை நட்சத்திரங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் நடைபெற்று வரும் ‘தமிழ் ஐடல்’ இசைத் திறமையாளர்கள் தேடல் பயணம், தற்போது கோவை நகரை வந்தடைந்துள்ளது. சூப்பர் ஜட்ஜ் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் அறிவித்துள்ள இந்த பிரம்மாண்ட இசைத் திறமைத் தேடல் நிகழ்ச்சியின் கோவை ஆடிஷன், வரும் செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறுகிறது.
தமிழ்நாடு முழுவதும் இசையின் மீது ஆர்வமும், பாடும் திறமையும் கொண்ட இளம் தலைமுறையினருக்கு தங்களது திறமையை வெளிப்படுத்தும் அரிய வாய்ப்பாக ‘தமிழ் ஐடல்’ அமைந்துள்ளது. பல கனவுகளுடன் இசை உலகில் சாதிக்க வேண்டும் என்ற இலக்குடன் பயணிக்கும் இளம் பாடகர்களுக்கு, தங்களது குரலை சரியான மேடையில் ஒலிக்கச் செய்யும் வாய்ப்பை இந்த ஆடிஷன் வழங்குகிறது.
14 வயது முத...


