முதல்வர்ஜெயலலிதா மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்
ஜெயலலிதா மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி உட்பட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் பிரணாப் :
தமிழகத்தின் வளர்ச்சிக்கு அளப்பரிய பணியாற்றியவர் லட்சக்கணக்கான மக்கள் விரும்பிய ஒரு தலைவரை நாடு இழந்து விட்டது.
பிரதமர் மோடி:
ஜெயலலிதா மறைவு அரசியலில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.
காங்கிரஸ் தலைவர் சோனியா:
ஏழை, எளியோரின் மேம்பாட்டுக்கான அரசியல் தலைவராக வாழ்ந்தவர்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் :
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக வாழ்ந்தவர்.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி:
சிறந்த தலைவர் ஜெயலலிதாவின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி:
சிறந்த தலைவரை இழந்து விட்டோம்.
டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்...
