தமிழ் – மலையாள ரசிகர்களை அச்சத்தில் ஆழ்த்த வருகிற ‘அருபீ’… ஹாரர் திரில்லராக ஜூலை 3-ல் திரைக்கு!
தமிழ் – மலையாள ரசிகர்களை அச்சத்தில் ஆழ்த்த வருகிற 'அருபீ'... ஹாரர் திரில்லராக ஜூலை 3-ல் திரைக்கு!
திகிலும், மர்மமும், பரபரப்பும் கலந்த ஹாரர் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள 'அருபீ', தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களை ஒரே நேரத்தில் கவரும் நோக்கில் ஜூலை 3-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
பி.கே.ஆர். புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரணய் காளியப்பன் வெளியிடும் இந்த திரைப்படத்தை, மலையாள திரையுலகின் புதுமுக இயக்குநர் அபிலாஷ் வாரியார் இயக்கியுள்ளார். புதிய களத்திலும், வித்தியாசமான கதைக்களத்திலும் உருவாகியுள்ள இப்படம், ஹாரர் திரில்லர் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இப்படத்திற்கு ஒளிப்பதிவை ஆமன் மேற்கொண்டுள்ள நிலையில், இசையை பிரபல இசையமைப்பாளர் கோபி சுந்தர் அமைத்துள்ளார். புணர்த்தம் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரதீப் ரா...
