கபடி வீரனின் கரடுமுரடான காதல் கதை ஆதிராஜன் இயக்கும் “ அருவா சண்ட “
ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் வி.ராஜா பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் "அருவாசண்ட "
தமிழ் திரையுலகின் முழுமையான முதல் டிஜிட்டல் படமான “ சிலந்தி “ படத்தை எழுதி இயக்கி வெற்றி பெற்றவரும் “ ரணதந்த்ரா “ சிலந்தி - 2 போன்ற படங்களின் இயக்குனருமான ஆதிராஜன் அடுத்து கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் புதிய படம் “ அருவா சண்ட “
தென் மாவட்டங்களில் நடந்து வரும் ஆவணக் கொலைகளின் பின்னணியில், ஒரு கபடி வீரனின் கரடு முரடான காதல் கதையாக உருவாகி வருகிறது இப்படம். தமிழர்களின் தேசிய அடையாளமான கபடியின் பெருமைகளை உலகறிய உரக்கச் சொல்ல வருகிறது “ அருவா சண்ட “
இந்த படத்தின் கதை நாயகனாக ராஜா நடிக்கிறார். இவர் திருநெல்வேலியைச் சேர்ந்த கபடி வீரர். கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. இதுவரை திரையில் பார்த்திராத புதுமையான அம்மாவாக சரண்யா பொன்வண்ணனும், வில்லானாக ஆடுகளம் நரேனும் நடிக்கிறார்கள். ம...
