‘மகளே’… இசையில் மீண்டும் உயிர் பெறும் 80கள்! – ‘பத்தா’ முதல் பாடல் சொல்லும் தந்தை–மகள் பாசக் கதை
‘மகளே’… இசையில் மீண்டும் உயிர் பெறும் 80கள்! – ‘பத்தா’ முதல் பாடல் சொல்லும் தந்தை–மகள் பாசக் கதை
சாய் அப்யங்கர் என்றாலே இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது துள்ளலான இசையும், உடனே மனதில் ஒட்டிக்கொள்ளும் பாடல்களும்தான். ஆனால், இந்த முறை அவர் முற்றிலும் வேறொரு பாதையைத் தேர்வு செய்திருக்கிறார். மெதுவான இசை, மனதை வருடும் குரல், கவிதை போன்ற வரிகள் என அமைந்திருக்கும் ‘மகளே’, சாய் அப்யங்கரின் இன்னொரு இசை முகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது.
விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் முதல் பாடலாக வெளியாகியிருக்கும் ‘மகளே’, வெளியானதிலிருந்து கவனம் பெற்று வருகிறது. அட்லி வழங்கும் இப்படத்தை Star Studio18, A for Apple Studios மற்றும் Cine1 Studios Production நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
சாய் அப்யங்கரிடம் இப்படியொரு...
