தனுஷ் – ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியின் ‘ஓம்’: தமிழ் சினிமாவின் அடுத்த பிரம்மாண்ட நிகழ்வாக மாறும் 5 காரணங்கள்!
தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியின் ‘ஓம்’: தமிழ் சினிமாவின் அடுத்த பிரம்மாண்ட நிகழ்வாக மாறும் 5 காரணங்கள்!
தமிழ் சினிமாவில் சில திரைப்படங்கள் அறிவிக்கப்படும் தருணத்திலேயே ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிவிடும். அப்படிப்பட்ட பட்டியலில் தற்போது இணைந்துள்ளது தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியின் ‘ஓம்: சேப்டர் 1’.
தலைப்பு அறிவிப்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், படக்குழுவினர் பகிர்ந்த தகவல்கள் இந்தப் படம் சாதாரண கமர்ஷியல் திரைப்படம் அல்ல என்பதை உணர்த்துகின்றன. ஏன் ‘ஓம்’ தற்போது தமிழ் சினிமாவின் அதிகம் பேசப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது என்பதை பார்க்கலாம்.
1. முதல் முறையாக இணையும் தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணி
‘அமரன்’ திரைப்படத்தின் மூலம் தேசிய அளவில் கவனம் ஈர்த்த இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, இந்த முறை நடிகர் தனுஷுடன் கைகோர்த்துள்ளார். ஒரு பக்...
