தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கும் படத்தின் படபிடிப்பு ஆரம்பம்
தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் பிறகு சகலாகலாவல்லவன் என்று சொல்லும் அளவுக்கு தற்போது உள்ள நடிகர்களில் தனுஷ் மட்டும் தான் பொருந்துவார் என்று சொல்லலாம் காரணம் சினிமாவில் உள்ள அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குபர் இவர் இவரின் இயக்கத்தில் மிக பிரமாண்ட முறையில் இரண்டு மொழிகளில் தயாராகும் படத்தை பிரமாண்ட தயாரிப்பு நிறுவனம் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்குது இதன் படத்தின் பூஜையுடன் படபிடிப்பு நேற்று மிகவும் அமைதியாக ஆரம்பமானது
‘பவர் பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தனுஷ், அடுத்ததாக நடிப்பில் கவனம் செலுத்தினார். கெளதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி 2’, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ மற்றும் ‘த எக்ஸார்டினரி ஜர்னி ஆஃப் த பஹிர்’ ஆகிய படங்களில் நடித்தார்.
இதில், ‘த எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் த பஹிர்’ படம் ரிலீஸாகிவிட்டது. மற்ற மூன்...