தடை கடந்த துருவ நட்சத்திரம்: நீதிமன்ற உத்தரவால் வெளியீட்டுக்கு பச்சைக்கொடி
தடை கடந்த துருவ நட்சத்திரம்: நீதிமன்ற உத்தரவால் வெளியீட்டுக்கு பச்சைக்கொடி
நீண்டநாள் எதிர்பார்ப்பில் இருந்த “துருவ நட்சத்திரம்” திரைப்படம், வெளியீட்டிற்கான சட்டத் தடைகளை தாண்டி, தற்போது திரைக்கு வருவதற்கான வழி அமைந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. செந்தில்குமார் ராமமூர்த்தி வழங்கிய உத்தரவு இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
படத் தயாரிப்பில் செய்யப்பட்டுள்ள பெரும் முதலீடு மட்டுமல்லாமல், இதில் இணைந்துள்ள நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினரின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு நீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது. தொடர்புடைய அனைத்து தரப்பினரின் நலன்களும் பாதிக்கப்படாத வகையில், சில குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் திரைப்படத்தை வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒரு வாரத்திற்கும் மேலாக சம்பந்தப்பட்ட அனைவருடனும் நேரடியாக கலந்துரையாடி, ஒரும...
