“ஜோ” வெற்றிக்குப் பிறகு புதிய அத்தியாயம்: ஜி.வி.பிரகாஷுடன் இணையும் இயக்குநர் ஹரிஹரன் ராம்!
“ஜோ” வெற்றிக்குப் பிறகு புதிய அத்தியாயம்: ஜி.வி.பிரகாஷுடன் இணையும் இயக்குநர் ஹரிஹரன் ராம்!
தமிழ் திரையுலகில் சமீபத்தில் கவனம் பெற்ற “ஜோ” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் ஹரிஹரன் ராம் தனது அடுத்த முயற்சியாக இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமாருடன் கைகோர்த்துள்ளார். இந்த புதிய கூட்டணி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லார்க் ஸ்டூடியோஸ் மற்றும் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படம், லார்க் ஸ்டூடியோஸின் அடுத்த முக்கியமான தயாரிப்பாக உருவாகிறது. ‘கருடன்’, ‘மாமன்’ போன்ற படங்களின் தொடர்ச்சியாக உருவாகும் இந்த முயற்சி, ஆரம்ப கட்டத்திலேயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் ஹரிஹரன் ராம் சொன்ன கதையின் தனித்துவம் ஜி.வி.பிரகாஷை கவர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர் இந்த படத்தில் நாயகனாக நடிப்பதுடன் மட்டுமல்லாமல், இசையமைப்பாளராகவும், ...
