
நான் சிந்தித்துக் கொண்டிருந்ததை பா.இரஞ்சித் செய்து காட்டியிருக்கிறார் – இயக்குநர் வெற்றிமாறன்!
“கூகை திரைப்பட இயக்கம்” ஒருங்கிணைத்திருந்த “வடசென்னை” திரைப்படம் குறித்த கலந்துரையாடல் கூகை நூலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் “வடசென்னை” திரைப்படத்தின் இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் தனஞ்செயன், எழுத்தாளர்கள் கரன் கார்க்கி மற்றும் சுகுணா திவாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளர்கள் தங்களுடைய பார்வையில் வடசென்னை திரைப்படத்தின் திரைமொழி, காட்சியமைப்புகள், தொழிற்நுட்பம் மற்றும் அரசியல் ஆகியவை குறித்து பேசினார்கள். இறுதியில் இயக்குநர் வெற்றிமாறன் ஏற்புரை வழங்கினார்.
ஏற்புரையில் இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது,
“கூகையின் தொடக்க விழாவிற்கு என்னால் வரமுடியாமல் போனது. இந்த முன்னெடுப்பிற்காக பா.இரஞ்சித்தை பாராட்டுகிறேன். பாலுமகேந்திரா சார் இறந்ததற்குப் பிறகு அவருடைய 7000 புத்தகங்கள் என்னிடம் இருந்தன. அவற்றை வைத்து “BALUMAHENDRA READING CIRCLE” என்ற ஒன்றை தொடங்கலாம் எ...