“‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தைத் திரையரங்கம் வந்து ஏன் பார்க்க வேண்டும்?’ – இயக்குநர்
ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘கூட்டத்தில் ஒருவன்’ படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார்.. இவர் பிரபல வார இதழ் பத்திரிகை ஒன்றில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.. இந்தப்படத்தின் கதாநாயகனாக அசோக் செல்வன் மற்றும் கதாநாயகியாக ப்ரியா ஆனந்த் நடிக்க, படத்திற்கு இசையமைத்துள்ளார் நிவாஸ் கே.பிரசன்னா. வரும் 28ம் தேதி ரிலீஸாகும் இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஞானவேல் ஆயிரத்தில் ஒருத்தனுக்கும் கூட்டத்தில் ஒருத்த னுக்கும் என்ன வித்தியாசம் என்பதை விளக்கினார்.. அதாவது, “சூப்பராக படிக்காத, அதேசமயம் மோசமாகவும் இல்லாத மிடில் பெஞ்ச் மாணவர்களின் வாழ்க்கை தான் இந்த கூட்டத்தில் ஒருவன்’ படத்தின் கரு. முன்பு வானொலி யில் பணிபுரிந்த தென்கச்சி கோ.சுவாமிநாதன் என்கிற பேச்சாளரை சந்தித்தபோது அவர், நான் ஒரு மிடில் பெஞ்ச் மாணவன் என்று தன்னை சொல்லிக்கொண்டார்..அப்படிப்பட்டவர் தனக்குள் இருக்கும் திறமையை கண்டறி...