மான்ஸ்டர் வெற்றி என்னை எலி மாமா என்று என்னை அன்போடு அழைக்கும் குழந்தைகள் எஸ்.ஜே.சூர்யா
தமிழ் சினிமாவில் நல்ல படங்களுக்கு எப்போதும் மிக சிறந்த வரவேற்ப்பு இருக்கும் அதே போல எப்பவும் நல்ல படங்களை மட்டுமே தயாரிக்கும் நிறுவனம் என்றால் அது எஸ்.ஆர்.பிரபுவின் புரடன்சியல் தயாரிப்பு நிறுவனம் அவர்களின் சமீப தயாரிப்பு என்றால் அது மான்ஸ்டர் இந்த படம் கடந்த வாரத்துக்கு முன் வாரம் வெளியாகி சக்கை போடு போடுகிறது அது வசூலில் மிக பெரிய சாதனை புரிந்துவருகிறது இதற்க்கு நன்றி சொல்ல படக்குழு இன்று நன்றி கூட்டம் நடத்தியது இதில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் கருணாகரன் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் மற்றும் படகுழ்வினர்கள் கலந்து பேசினார்கள் அந்த தொகுப்பை பார்க்கலாம் .
இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசும்போது
படத்தின் முதல் வரியை எழுதும்போது இந்தளவு வெற்றி கிடைக்கும் என்று நினைக்கவில்லை. குழந்தைகள் படமாக இருக்கும் என்றும் நினைக்கவில்லை. நம் வீட்டைச் சுற்றி இருக்கும் எலியை பிரம்மாண்டமாக காட்ட வேண்டும் என்று...


