பிறந்தநாளில் படப்பிடிப்பை நிறைவு செய்த ‘ஒரண்ட’ – இரட்டை கொண்டாட்டத்தில் இயக்குநர் சுசி கணேசன்
பிறந்தநாளில் படப்பிடிப்பை நிறைவு செய்த ‘ஒரண்ட’ – இரட்டை கொண்டாட்டத்தில் இயக்குநர் சுசி கணேசன்
படக்குழுவினருடன் இணைந்து பிரியாணி சமைத்து பிறந்தநாளை கொண்டாடிய இயக்குநர்
இயக்குநர் சுசி கணேசன் தனது அடுத்த படைப்பாக உருவாக்கி வரும் திரைப்படத்திற்கு ‘ஒரண்ட’ எனப் பெயரிட்டிருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். தலைப்பு அறிவிக்கப்பட்டது முதலே படத்தின் கதை என்ன, யார் நடிக்கிறார்கள், எந்த மாதிரியான திரைப்படமாக இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தனது பிறந்தநாளான ஆகஸ்ட் 25-ஆம் தேதியன்று ‘ஒரண்ட’ திரைப்படத்தின் படப்பிடிப்பை முழுமையாக நிறைவு செய்துள்ளதாக சுசி கணேசன் அறிவித்துள்ளார்.
படப்பிடிப்பு நிறைவு பெற்றதோடு, தனது பிறந்தநாளையும் படக்குழுவினருடன் இணைந்து வித்தியாசமான முறையில் கொண்டாடியிருக்கிறார் சுசி கணேசன். படப்பிடிப்பு தளத்தில் படக்குழு...
