“புராணம், புதையல், பரபரப்பு… ஜூலை 3-ல் திரைக்கு வரும் ‘நாகபந்தம்’ மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!”
“புராணம், புதையல், பரபரப்பு... ஜூலை 3-ல் திரைக்கு வரும் ‘நாகபந்தம்’ மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!”
பான் இந்தியா அளவில் உருவாகியுள்ள பிரம்மாண்ட புராண சாகச திரைப்படமான ‘நாகபந்தம்’ ஜூலை 3-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளியீட்டிற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், படக்குழு நாடு முழுவதும் தீவிர விளம்பரப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் விராட் கர்ணா நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வழக்கமான புராணக் கதையை மட்டும் சொல்லாமல், இந்திய வரலாறு, கோயில் மரபுகள், மறைக்கப்பட்ட புதையல்கள் மற்றும் தெய்வீக சக்திகளை இணைத்து ஒரு வித்தியாசமான உலகத்தை உருவாக்கியிருப்பது ட்ரெய்லரில் தெளிவாகப் பிரதிபலிக்கிறது.
திருவனந்...

