கிராமத்து மண்வாசனையுடன் மீண்டும் வருகிறார் கவின்! ‘பேர் சொல்லும் பிள்ளை’ படப்பிடிப்பு இனிதே தொடக்கம்
கிராமத்து மண்வாசனையுடன் மீண்டும் வருகிறார் கவின்! ‘பேர் சொல்லும் பிள்ளை’ படப்பிடிப்பு இனிதே தொடக்கம்
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து வெற்றிப் பாதையில் பயணித்து வரும் நடிகர் கவின், தற்போது மேலும் ஒரு புதிய கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களை சந்திக்கத் தயாராகியுள்ளார். அந்தப் புதிய பயணத்தின் பெயர் தான் ‘பேர் சொல்லும் பிள்ளை’.
‘தண்டட்டி’ திரைப்படத்தின் மூலம் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய இயக்குநர் ராம் சங்கையா, இந்த முறை கிராமத்து பின்னணியையும், குடும்ப உணர்வுகளையும், நகைச்சுவையையும் கலந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு படைப்பை உருவாக்க களமிறங்கியுள்ளார். அதில் கதையின் மையமாக கவின் இடம்பெறுவது ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிக்கிறார். மேலும், ஒளிப்பதிவை ஆர். வேல்ராஜ் கவனிக்க,...
