ரசிகர்மன்ற நிர்வாகிகளுடன், நாளை முதல் ரஜினிகாந்த் 4 நாட்கள் ஆலோசனை முக்கிய முடிவுகள்
தமிழக அரசியல் களம், நடிகர்கள் ரஜினி, கமல் வருகையால் விறுவிறுப்பு அடைந்துள்ளது.
திரைத்துறையில் அவர்கள் இருவருக்கும் இடையே எப்படி போட்டி இருந்ததோ, அதே போன்று அரசியலிலும் உருவாகியுள்ளது.
கமல்ஹாசன் கடந்த மாதம் “மக்கள் நீதி மய்யம்” என்ற புதிய கட்சியை மதுரையில் தொடங்கினார். இதைத் தொடர்ந்து மாவட்ட பொறுப்பாளர்களை நியமனம் செய்து, கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணியை அவர் தீவிரப்படுத்தியுள்ளார். அடுத்து அவர் அடுத்த மாதம் (ஏப்ரல்) திருச்சியில் கட்சி மாநாட்டை நடத்த உள்ளார்.
கமல்ஹாசனின் கட்சி நடவடிக்கைகள் தீவிரமாகி வருவதால், ரஜினியின் கட்சிப் பணிகள் எப்போது தீவிரம் பெறும் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடமும் பொதுமக்களிடமும் ஏற்பட்டுள்ளது. ஆனால் ரஜினி, புதிய கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்பு தமிழகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்களை முதலில் ஒருங்கிணைக்க முடிவு ச...
