வாய்ப்பு தேடி சென்ற இடத்தில் வெளியே சொல்ல முடியாத அசிங்கத்திற்கு ஆளான நடிகை
தயாரிப்பாளர் அல்லது இயக்குனர் அல்லது இருவருடனும் படுக்கையை பகிர்ந்தால் தான் வாய்ப்பு என்றார்கள் என தேசிய விருது பெற்ற நடிகை உஷா ஜாதவ் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே, சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கிய நடிகை உஷா ஜாதவ், நடிகையாக முயற்சி செய்து வரும் 25 வயது பெண் ஆகியோர் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து பிபிசி ஆவண படத்தில் பேசியுள்ளனர்.
அந்த ஆவண படத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது,சிலரை மக்கள் கடவுள் போன்று பார்க்கிறார்கள். அவர்கள் அதிகாரம் மிக்கவர்களாக இருப்பதால் நான் அவர்களை பற்றி புகார் தெரிவித்தால் என்னை யார் நம்புவார்கள் அல்லது என் கெரியர் பாதிக்கப்படும் என்று நடிகைகள் பயப்படுகிறார்கள் என்கிறார் ராதிகா ஆப்தே.
திரையுலகில் உள்ள அதிகாரம் படைத்தவர்கள் பெண்களை படுக்கைக்கு அழைப்பது சர்வ சாதாரணம். பட வாய்ப்புக்கு பதிலுக்கு நீங்கள் ஏதாவது தர வேண்டும் என்று...
