“அரசுப்பள்ளியிலிருந்து தனியார் பள்ளி வரை… ஒரு தந்தையின் போராட்டம்: புதிய குடும்பப்படம் தொடக்கம்!”
“அரசுப்பள்ளியிலிருந்து தனியார் பள்ளி வரை… ஒரு தந்தையின் போராட்டம்: புதிய குடும்பப்படம் தொடக்கம்!”
சாதாரண மனிதர்களின் வாழ்க்கைச் சிக்கல்களை மனதைக் கவரும் கதையாக சொல்லும் புதிய முயற்சியாக, பி ஸ்கொயர் என்டர்டெயின்மென்ட் மற்றும் சினிமா டூர் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் சென்னையில் சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது. ‘புரொடக்ஷன் நம்பர் 3’ என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்தப் படம், ஒரு குடும்பத்தின் உணர்ச்சிகளை மையமாகக் கொண்டு உருவாகிறது.
தயாரிப்பாளர் சரத் பாபு மற்றும் இணை தயாரிப்பாளர் சூர்யா தேவி இணைந்து உருவாக்கும் இந்தப் படத்தில், நடிகர் காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் ரேஷ்மா முரளிதரன், ஜென்சன் திவாகர், ஆடுகளம் நரேன், மைம் கோபி, ஜெயபிரகாஷ், விஜே பாரு, வினோதினி உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர்.
இந்தப் படத்தின் சிறப்பு என்னவெனில், இது ஒ...
