
ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன்
மதுரவீரன் திரைப்படத்திலிருந்து “என்ன நடக்குது நாட்டுல“ எனும் சிங்கள் பாடல் சில வாரங்களுக்கு முன் வெளிவந்து அனைவரிடமும் நல்ல வரவேற்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. சமகாலத்தில் நம் சமூகத்தில் நடக்கும் அவலங்களை தோலுரிக்கும் வகையில் அமைந்திருந்த இப்பாடலை தற்போது பல்வேறு அரசியல் கட்சிகள் பிரச்சார பொதுகூட்டத்தில் தங்கள் கருத்துக்களை எடுத்து சொல்ல பயன்படுத்திவருகிறார்கள்.
இன்றையளவில் பரபரப்பாக இருக்கும் ஆர்.கே.நகர் பிரச்சார களத்தில் தவறாமல் “என்ன நடக்குது நாட்டுல“ பாடல் ஒலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மதுரவீரன் திரைப்படத்தின் முதல் சிங்கள் பாடலே பெரிய அளவில் மக்களிடம் சென்று அடைந்திருப்பது படகுழுவுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.
இதை பற்றி படத்தின் இயக்குநர் பி.ஜி.முத்தையா கூறியது, ‘எனக்கு படத்தில் பட்டுக்கோட்டையார் பாடலை போல ஒரு பொதுவுடைமை பாடல் தேவைப்பட்டது. இதை நான் கவிஞர் யுகபாரதிய...