சர்கார் கதை வருண் ராஜேந்திரனின் தான் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புதல்
ஒவ்வொரு முறையும் ஏ.ஆர்.முருகதாஸின் கதைகள் திருட்டு முத்திரை குத்தப்படுவதும் அவர் அதிலிருந்து வெளியே வந்து அதைத் தன் கதையாகவே நம்ப வைத்துவிடும் சாதுர்யமும் அவரை மேலும் மேலும் தவறுகள் செய்யும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டிருந்தது எனலாம்.
அவர் காப்பியடித்த நபர்களில் ஹாலிவுட்டின் ‘கிறிஸ்டபர் நோலனி’ல் இருந்து ‘சர்கார் கதை நாயகன்’ வருண் ராஜேந்திரன் வரை எல்லா ரேஞ்சிலும் இயக்குநர்கள் நிற்கிறார்கள் வரிசைக் கட்டி.
இதில் கடந்த ‘கத்தி’ படக்கதை தன்னுடையது என்று கோபி நயினார் அறிவித்தபோதுதான் முருகதாஸின் வேடம் வெளிபட்டது.
ஆனாலும் கடைசிவரை கோபி போராடாமல் ஜகா வாங்கியதால் அந்தக் கதையும் ஏ.ஆர்.முருகதாஸின் கதையே என்றானது. இப்போது வருண் ராஜேந்திரன் உறுதியாக நின்றதுடன் அதற்குத் துணையாக நின்ற காதாசிரியர்கள் சங்கத் தலைவர் கே.பாக்யராஜின் தன்னலமில்லா தன்மையும் இந்தப் பிரச்சினையிலிருந்து அவ்வளவு சீக்கிரம் வெள...
