பெண்களின் பாதுகாப்பு குறித்து வலுவான விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘விடைத்தாள்’ குறும்படம் – பார்வையாளர்கள் மற்றும் பிரபலங்களின் பாராட்டு!
பெண்களின் பாதுகாப்பு குறித்து வலுவான விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘விடைத்தாள்’ குறும்படம் – பார்வையாளர்கள் மற்றும் பிரபலங்களின் பாராட்டு!
சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து அர்த்தமுள்ள கருத்தை வலியுறுத்தும் நோக்கில், இளம் இயக்குநர் கார்த்திக் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள ‘விடைத்தாள்’ குறும்படம் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள், அவர்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வின் அவசியம் மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றை உணர்வுப்பூர்வமாகவும், யதார்த்தமான காட்சியமைப்புகளுடனும் இந்தக் குறும்படம் பதிவு செய்கிறது. குடும்பத்தினரும், இளைஞர்களும், மாணவர்களும் கட்டாயம் பார்த்து சிந்திக்க வேண்டிய படைப்பாக ‘விடைத்தாள்’ உருவாகியுள்ளதாக இயக்குநர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
குறும்படத்தின் வலிமையை மேல...
