என்னை மன்னித்து விடுங்கள் ரசிகர்களிடம் சிம்பு கண்ணீர் மல்க வேண்டுகோள்
நடிகர் சிம்பு இரண்டு வாரத்திற்கு முன்னர், கட்-அவுட் வேண்டாம், பாலாபிஷேகம் செய்யாதீர்கள், பிளாக்கில் டிக்கெட் வாங்கி படம் பார்க்காதீர்கள், அம்மாவுக்கு புடவை எடுத்து கொடுங்கள், அப்பாவிற்கு வேஷ்டி எடுத்து கொடுங்கள் என தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கினார். சிம்புவின் பேச்சை பலரும் வரவேற்றனர்.
அடுத்த சில நாட்களிலேயே யாரோ ஒரு சிலர் கேலி செய்தார்கள் என்பதற்காக மாற்றி பேசினார் சிம்பு. அதாவது, பெரிய பெரிய கட்-அவுட் பேனர் வையுங்கள், பாக்கெட்டில் இல்லை அண்டா அண்டாவா ஊற்றுங்கள் என்றார்.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம், சிம்புவுக்கு கட்-அவுட் வைத்து, தவறி விழுந்து இறந்த மதன், என்பவரின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல, அவரது இல்லத்திற்கு இன்று(ஜன.,28) சென்றார் சிம்பு.
பாலாபிஷேகம் வேண்டாம்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எனது ரசிகர் இறந்ததால் மிகுந்த வேதனையில் இருந்தேன். அவன் இறந்த சமயத்தில...
