அக்டோபரில் தொடங்கும் புதிய பான் இந்தியா முயற்சி; கிரண் அப்பாவரத்துடன் களமிறங்கும் ஜீ ஸ்டுடியோஸ்!
அக்டோபரில் தொடங்கும் புதிய பான் இந்தியா முயற்சி; கிரண் அப்பாவரத்துடன் களமிறங்கும் ஜீ ஸ்டுடியோஸ்!
இந்திய சினிமாவில் பான் இந்தியா படங்களின் வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மேலும் ஒரு புதிய பிரம்மாண்ட முயற்சி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஜீ ஸ்டுடியோஸ், தயாரிப்பாளர் பிரேர்ணா அரோராவுடன் கைகோர்த்து புதிய திரைப்படம் ஒன்றை உருவாக்கவுள்ளது.
தற்காலிகமாக ‘KA16’ என அழைக்கப்படும் இந்தப் படத்தில், தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் கிரண் அப்பாவரம் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக ஸ்ரீகாந்த் புப்பாலா அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இந்தத் திரைப்படம், மொழி மற்றும் மாநில எல்லைகளைத் தாண்டி இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களை சென்றடையும் வகையில் வடிவமைக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதற்கேற்ப...

