யார் பிரிவுக்கும் நான் காரணம் இல்லை – சுருதிஹாசன்
உலக நாயகன் மகள் சுருதி ஹாசன் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகை தன் அப்பா சினிமாவில் இருந்தும் தன் முயற்சி உழைப்பால் உயரவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அதே போல் எந்த விஷயமும் தன் தந்தையை போலவே நேரடியாக தைரியமாக பேசக்கூடியவர் சமீபத்தில் அவர் தன் திருமண வாழ்க்கையை பற்றி மிக தைரியமாக பகிர்ந்தார் .
ஸ்ருதிஹாசன் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறுபவர். இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன் திருமணம் குறித்து பேசியுள்ளார்.இதில் ‘என்னுடைய திருமணம் நேரம் வரும்போது அதுவே நடக்கும், மேலும், திருமணத்திற்கு பிறகும் நான் சினிமாவில் நடிப்பேன்.
அதை யார் நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது, இதுமட்டுமின்றி என் தந்தை-கௌதமி பிரிவிற்கு நான் தான் காரணம் என்று சிலர் கூறுகிறார்கள்.
எனது தந்தையின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளிப்படையாக நான் பேச விரும்பவில்லை. மற்றவர்களின் சொந்த வாழ்க...
