ஒடுக்கப்பட்டவர்களின் குரல் உயர்த்து ஒலிக்கின்ற ஒரு படமாக மாவீரன்கிட்டு அமைந்துள்ளது !! – தொல்.திருமாவளவன்
ஒடுக்கப்பட்டவர்களின் குரல் உயர்த்து ஒலிக்கின்ற ஒரு படமாக, அடித்தட்டிலே இருப்பவர்கள் ஆவேசமாக பேசும் குரலாக இயக்குநர் சுசிந்திரன் இயக்கத்தில் மா வீரன் கிட்டு திரைப்படத்தை இன்று காண வாய்ப்பு கிடைத்தது.
சமுகத்தில் நடக்கின்ற எதார்த்தமான போக்குகளையும் சாதி இந்த சமுதாயத்தில் எப்படி ஒடுக்கப்படுகிறது எந்தளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டு இருக்கின்றன, எந்தளவிற்கு முரண்பாடுடாக கொண்டு இருக்கின்றது என்பதனை மிக எதார்த்தமாக சொல்லும் விதத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் இயக்குநர் மட்டும் அல்ல இப்படத்தை தயாரித்து இருப்பவர் வசனம் எழுதி இருப்பவர் அனைவரும் மிக துணிச்சல்லாக இதை செய்துள்ளனர். பாடலாசிரியர் யுகபாரதி இப்படத்தில் வசனம் எழுதியுள்ளார். படத்தில் ஒரு இடத்தில் அதிகாரத்தில் இருப்பவரை நாங்கள் தவறு சொல்லவில்லை அதிகாரமே தவறு என சொல்கிறோம். என்ற வசனம் மிக அழகாக உள்ளது. அதிகாரம் எந்தளவிற்கு எளி...
