“முடிந்தது ‘ஹைக்கூ’ பயணம்… இப்போது திரையில் மலர காத்திருக்கும் ஒரு மென்மையான கவிதை!”
“முடிந்தது ‘ஹைக்கூ’ பயணம்... இப்போது திரையில் மலர காத்திருக்கும் ஒரு மென்மையான கவிதை!”
பெரிய அறிவிப்புகள், பிரம்மாண்ட விளம்பரங்கள், சமூக வலைதள பரபரப்புகள் என எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக தனது பயணத்தை மேற்கொண்டிருந்த ‘ஹைக்கூ’ திரைப்படம் தற்போது தனது முக்கியமான கட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. நான்கு கட்டங்களாக நடைபெற்ற 90 நாட்களுக்கும் மேலான படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது.
ஒரு திரைப்படத்தின் வெற்றி அதன் வெளியீட்டுக்குப் பிறகே தெரியும் என்பார்கள். ஆனால் ‘ஹைக்கூ’ திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே பலரது கவனத்தை ஈர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது. விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம், கேரளாவின் இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளிலிருந்து சென்னை மாநகரின் பரபரப்பான இடங்கள் வரை பல்வேறு பின்னண...
