Tuesday, February 11
Shadow

Tag: thalaivar

நாம் மூன்று பேர் காலில் தான் விழ வேண்டும்: ரஜினிகாந்த்

நாம் மூன்று பேர் காலில் தான் விழ வேண்டும்: ரஜினிகாந்த்

Latest News, Top Highlights
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் 3-வது நாளாக நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். இன்று மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல் மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். அதற்கு முன்னதாக ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினி, மதுரை என்றால் வீரத்திற்கு அடையாளம். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்த போது அர்ச்சகர் தன்னிடம் என்ன நட்சத்திரம் என்று கேட்டார். அப்போது எனக்கு பிறந்தநாள், நட்சத்திரம், கோத்திரம் என எதுவுமே தெரியாது. அதையடுத்து எனக்கு அருகில் இருந்தவர் பெருமாள் நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்து விடுங்கள் என்று கூறினார். பிறகு தான் தெரிந்தது எனது நட்சத்திரம் பெருமாள் நட்சத்திரம் தான். மதுரை, சேலம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து வந்துள்ள உங்களுக்கு கிடா வெட்டி கறி சோறு படைக்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது. ஆனால் ராகவேந்...
அனைவருக்காகவும் ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்: ரஜினிகாந்த் பேச்சு

அனைவருக்காகவும் ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்: ரஜினிகாந்த் பேச்சு

Latest News, Top Highlights
ரஜினிகாந்த் தனது ரசிகர்களை இரண்டாவது நாளாக சந்தித்து வருகிறார். ராகவேந்திரா மண்டபத்திற்கு வந்த பின்னர் ரசிகர்கள் மத்தியில் ரஜினி பேசியதாவது:- இரண்டாவது நாளாக உங்களை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவர்கள் குடும்பம்தான் முக்கியம். தாய், தந்தையர் வாழும் தெய்வங்கள். குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும், நமது சொத்து அவர்கள் தான். ரசிகர்கள் கட்டுப்பாடுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆக்கபூர்வமாக சிந்தியுங்கள். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன், உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. என்று கூறினார்....
ரஜினியின் உயர்வுக்கு நிதானம் தான் காரணம்: இயக்குநர் மகேந்திரன்

ரஜினியின் உயர்வுக்கு நிதானம் தான் காரணம்: இயக்குநர் மகேந்திரன்

Latest News, Top Highlights
நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியலில் ஈடுபட இருக்கிறார். விரைவில் புதிய கட்சியை தொடங்கி முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாக ரஜினி அவர்களது ரசிகர்களை சந்தித்து வருகிறார். இன்று (26-ந்தேதி) முதல்31-ந் தேதி வரை ரஜினி மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார். இதில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி மாவட்ட ரசிகர்களை இன்று சந்திக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்துடன் தயாரிப்பாளர் கலைஞானம், இயக்குநர் மகேந்திரனும் கலந்து கொண்டனர். இதில் இயக்குநர் மகேந்திரன் பேசுகையில், யாரும் வருத்தப்படும்படி ரஜினி நடந்து கொள்ள மாட்டார். ரஜினியின் உயர்வுக்கு காரணம் அவரது நிதானம் தான். நிதானம் உள்ளவர்கள்தான் ஜெயித்து சாதனை படைக்கின்றனர். நல்ல தலைவனுக்குரிய அத்தனை அம்சங்களும் ரஜி...
அரசியல் நிலைப்பாடு குறித்து 31-ஆம் தேதி அறிவிப்பேன்: ரஜினிகாந்த்

அரசியல் நிலைப்பாடு குறித்து 31-ஆம் தேதி அறிவிப்பேன்: ரஜினிகாந்த்

Latest News, Top Highlights
ரஜினிகாந்த் தற்போது தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். கடந்த முறை ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்த போது, “நமது அரசியல் சிஸ்டம் சரி இல்லை. போர் வரும் போது களத்தில் இறங்குவேன்” என்று அறிவித்தார். எனவே, ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அவருடைய பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி புதிய அரசியல் கட்சி குறித்து ரஜினி அறிவிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அன்றும் அறிவிப்பு வரவில்லை. இந்த நிலையில், இன்று முதல் ரசிகர்களை 31-ந் தேதி வரை சந்திக்கிறார். இதில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினி, தனது அரசியல் நிலைப்பாடு குறித்து வருகிற 31-ஆம் தேதி அறிவிப்பேன் என்றார். மேலும் ரஜினி பேசுகையில், ‘ரசிகர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. ரசிகர்களை பார்த்தவுடனேயே தனக்குள் புத்துணர்வு ஏற்பட்டுள்ளத...