திரையரங்க உரிமையாளர்களின் அராஜக போக்கு தயாரிப்பளர்களை நசுக்கும் எண்ணம்
ஒரு மாதத்திற்கு முன்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பல்வேறு பிரச்சினைகளுக்காக வேலை நிறுத்தம் என்று தன்னிச்சையாக அறிவித்ததற்காக, இதே திரையரங்கு உரிமையாளர்கள்தான் கொதித்தெழுந்தார்கள்.
ஜி.எஸ்.டி. வரி அமலாகும் தேதி 4 மாதங்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டுவிட்டது. தமிழக அரசு கேளிக்கை வரியை நீக்குமா? நீக்காதா என்பதை கேட்டுத் தெரிந்து கொள்வதற்கு நமது சினிமா அமைப்புகளுக்கு இத்தனை மாதங்கள் ஆகியிருக்கிறது..
இன்னும்கூட உறுதியான தகவலை அவர்களிடமிருந்து பெற முடியவில்லையெனில் தியேட்டர் சங்க நிர்வாகிகளின் கடும் உழைப்பை நம்மால் உணர முடிகிறது..!
இத்தனை நாட்கள் பொறுமையாய் காத்திருந்துவிட்டு இப்போது திட்டம் அமலாகும் முதல் நாளில் திடுதிப்பென்று ஸ்டிரைக் அறிவித்திருப்பது மட்டும் நியாயமா..?
இப்போது மட்டும் தியேட்டர் சங்க நிர்வாகிகள் யாரிடம் கலந்தாலோசித்து இந்த முடிவை எடுத்தார்கள்..?
எங்க சொத...
