திரைக்கதை மன்னன் பாக்யராஜையே கவர்ந்த ‘பீப்’ கதை; செப்டம்பர் 18-ல் வெளியாகிறது புதிய கிரைம் டிராமா!
திரைக்கதை மன்னன் பாக்யராஜையே கவர்ந்த ‘பீப்’ கதை; செப்டம்பர் 18-ல் வெளியாகிறது புதிய கிரைம் டிராமா!
குறும்பட உலகில் தனது திறமையை நிரூபித்த இயக்குநர் இல. சண்முக சுந்தர், தற்போது வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘பீப்’. வழக்கமான வன்முறை கிரைம் த்ரில்லர் பாணியில் இருந்து விலகி, வித்தியாசமான கதை சொல்லும் முறையில் உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
‘கட்டு’ (Bind) என்ற குறும்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இல. சண்முக சுந்தர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ராகவ் ரங்கநாதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் பஞ்சாப்பைச் சேர்ந்த பிரேர்ணா கண்ணா, யாமினி, ‘சார்பட்டா பரம்பரை’ புகழ் பிரியதர்ஷினி, நிதிஷ் வீரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘பீப்’, வழக்கமான கி...



