‘விழித்திரு’ பட பாடலை துபாயில் வெளியிட இருக்கும் இயக்குனர் மீரா கதிரவன்
இடம், பொருள், ஏவல் ஆகிய மூன்றும் தான் ஒரு செயலில் வெற்றி பெறுவதற்கு, அதுவும் திரையுலகில் நிலையான வெற்றி பெறுவதற்கு முக்கியமான சிறப்பம்சங்களாக கருதப்படுகிறது.....அத்தகைய சிறப்பம்சங்களை பின்பற்றி வரும் இயக்குநர் - தயாரிப்பாளர் மீரா கதிரவன், விரைவில் வெளியாக இருக்கும் தன்னுடைய 'விழித்திரு' படத்தின் 'STAY AWAKE' பாடலை துபாயில் மிக பிரமாண்டமாக வெளியிட முடிவு செய்திருக்கிறார்.
"என்னை பொறுத்தவரை நேரம் தான் இந்த உலகத்தில் எல்லாமுமாக இருக்கின்றது. வருகின்ற நவம்பர் 25 ஆம் தேதி, திரையுலகின் மூத்த நபர் அபிராமி ராமநாதன் அவர்கள் துபாயில் 'நட்சத்திர கலை விழா' என்னும் விமர்சையான கலை நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார்.... ஒட்டுமொத்த துபாயும் அன்றிரவு நட்சத்திரங்களின் வருகையால் 'விழித்திரு' க்கும் .... அப்படி ஒரு பிரமாண்டமான நிகழ்ச்சியில் எங்களின் 'விழித்திரு பாடலை வெளியிட வேண்டும் என்று தான் நான் பல ந...
