கதையே ஹீரோ… கதாநாயகி அல்ல!” – 300வது பட விழாவில் யோகி பாபுவின் மனம் திறந்த உரை; கமலுடன் நடிக்கும் ஆசையையும் பகிர்வு
"கதையே ஹீரோ... கதாநாயகி அல்ல!" – 300வது பட விழாவில் யோகி பாபுவின் மனம் திறந்த உரை; கமலுடன் நடிக்கும் ஆசையையும் பகிர்வு
சென்னை:
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான யோகி பாபு, தனது 300வது திரைப்படமான 'அர்ஜுனன் பேர் பத்து' படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய கருத்துகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. திரைப்படப் பயணம், போராட்டங்கள், புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு, கதையின் முக்கியத்துவம், கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அவர் வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார்.
வருகிற ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள 'அர்ஜுனன் பேர் பத்து' திரைப்படத்தை ரா. ராஜ்மோகன் எழுதி இயக்கியுள்ளார். தேவ் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் கிருத்திகா தங்கப்பாண்டி எஸ். மற்றும் தங்கப்பாண்டி. டி தயாரித்துள்ள இப்படத்திற்கு...
