கெளதம் வாசுதேவ் மேனனின் காந்தக் குரலில் ஆன்மாவைத் தொடும் ‘உயிரே வா’ பாடல்
மறத்தலும் மன்னித்தலுமே உறவுகளின் உன்னதம் என்றால் மிகையாகாது. குறிப்பாக காதலர்களுக்கிடையே உள்ள ஆத்மார்ந்தமான உறவுக்கு இது அப்படியே பொருந்தும்.வருண், சம்யுக்தா வர்மா ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் 'பப்பி' படத்தில் இடம் பெற்ற 'உயிரே வா...' என்ற பாடல் மிகப் பெரிய வரவேற்பை சினிமா ரசிகர்களிடம் பெற்று வருகிறது. காரணம், இதயத்தைத் வருடும் இதமான குரலில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இப்பாடலைப் பாடியிருப்பதுதான்.
கெளதம் வாசுதேவ் மேனன் கருத்தாக்கத்தில் உருவான இந்த வீடியோ பாடலுக்கு அவரே திரையில் தோன்றியிருப்பது மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது.
தேனினுமினிய இந்த திரையிசைப் பாடலை உருவாக்கிய இசையமைப்பாளர் தரண் இந்தப் பாடல் உருவான விதம் பற்றி விளக்குகையில்....உயிரே வா பாடலுக்கான கம்போஸிங் முடிந்ததும், பெருமுயற்சி ஏதுமின்றி இயல்பாகவே இந்தப் பாடல் வரிகளுக்கு அழுத்தம் தரக்கூடிய ஒரு பிரத்யேக க...
