அருண் விஜய் நடிக்கும் ‘மாஃபியா’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்
'மாஃபியா' படத்துக்கான தன் படப்பிடிப்பை முடித்துவிட்டு, இயக்குநர் கார்த்திக் நரேனை பாராட்டியுள்ளார் ப்ரியா பவானி சங்கர்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'மாஃபியா'. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் சில நாட்களுக்கு முன்பு தான் தொடங்கப்பட்டது.
ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டு பணிபுரிந்து வருகிறார்கள். இதில் ப்ரியா பவானி சங்கரின் படப்பிடிப்பு இன்றுடன் (ஆகஸ்ட் 17) முடிவடைந்துள்ளது. படுவேகமாக படப்பிடிப்பு முடிந்திருப்பதற்கு இயக்குநர் கார்த்திக் நரேனை தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பாராட்டியுள்ளார் ப்ரியா பவானி சங்கர்.
இது தொடர்பாக தன் பதிவில், "’மாஃபியா’ படத்தில் எனது காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மகிழ்ச்சியான, உற்சாகமான, மிக வேகமாக நடந்த படப்பிடிப்பு. கார்த்திக் நரேனின...
