உலக சினிமா வரலாற்றுல் ஒற்றை நபர் மட்டுமே நடிக்கும் 13வது படமாக உருவாகும் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’
ராதாகிருஷ்ணன் பார்த்திபன், அவர் உருவாக்கிய படைப்புகள் ஒருபோதும் ரசிகர் கூட்டத்தினிடையே ஒரு ஈர்ப்பை கொடுக்க தவறியதில்லை. கலை மற்றும் வணிக ரீதியான திரைப்படங்களுக்கு இடையிலான இடைவெளியை குறைப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் இருந்த ஒரு தடையை உடைத்தார். இது வெறுமனே அவரது வெற்றி மட்டுமல்ல, பலர் அதை தங்கள் சொந்த வெற்றியாக கருதி பாராட்டினர்.
இவர், ‘விருது படம்’ எனக் குறிப்பிடப்பட்ட, கலை சினிமா என்பது வரையறுக்கப்பட்ட ஒரு கூட்டத்தினருக்கானது என்ற ஒரு நம்பிக்கை இருந்தபோது, அதன் கருப்பொருளில், அதே சமயம் வணிக ரீதியான அம்சங்களை கலந்து வழங்குவதன் மூலம் அந்த மாயையை உடைத்தார்.
இப்போது ராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஒரு படைப்பாளராகவும் கலைஞராகவும் உருவாக்கியிருக்கும் அவரது அடுத்து வரவிருக்கும் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ திரைப்படம் சிங்கப்பூரில் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 7 வரை சிங்கப்பூரில் நடைபெறும் தெற்காசிய சர்வதேச ...
