
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் முக்கியமானவர் நடிகர் அஜித்குமார். இவர் தல என்று ரசிகர்களிடத்தில் அன்புடன் அழைக்கப்படுபவர் என்று அனைவரும் அறிந்ததே.நடிகர் அஜித்குமார் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் , ஊடகத்திற்கு பேட்டியும் கொடுக்கமாட்டார்.இதற்கான காரணம் அனைவரும் அறிந்ததே.
அப்படி தெரியவில்லை என்றால் அவர்களுக்கான ஒரு தொகுப்பு இது. நடிகர் அஜித்குமார் ஆஞ்சநேயா படம் திரைக்கு வரும் முன் ஊடகங்களுக்கு ஒரு பேட்டி அளித்தார்.அதில் அவர் “நான் சூப்பர் ஸ்டார் இடத்திற்கு வருவேன் என்று அறிவித்தார்.
பின்னர் ஊடகங்களினால் “நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் “என்று செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த செய்தியை கேட்டு ரஜினிகாந்த் ரசிகர்கள் நடிகர் அஜித்குமாரை எச்சரிக்கை விடுத்தனர்.இதற்கு பின் வெளிவந்த ஆஞ்சநேயா திரைப்படம் வெளியாகி படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் நடிகர் அஜித்குமார் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்காததற்கு இதுவும் ஒரு காரணம்.
