
தெறி படம் வெளியாகி இரண்டு வருடம் ஆவதை கொண்டாடும் விதமாக சென்னையில் உள்ள பிரபல திரையரங்கமான ரோகினி தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது பற்றி விஜய்யிடம் அந்த தியேட்டரின் நிர்வாக இயக்குனர் கூறியுள்ளார். அதற்கு “இது வெறும் கொண்டாடமாக மட்டும் இல்லாமல் காவேரி போராட்டத்திற்கு ஆதரவாக எதாவது செய்ய முடியுமா என பாருங்கள்” என கேட்டுக்கொண்டுள்ளார்.
நேற்று சென்னையில் நடிகர்கள் சார்பில் நடந்த அறவழி போரட்டத்தில் விஜய் முத்த ஆளாக சென்று கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
