
பாலிவுட்டின் இந்தியப் பின்னணிப் பாடகராவார். முகமது ரபீ, கிஷோர் குமார் மற்றும் மன்னா தேய் ஆகியோருடன் இணைந்து 1950கள் முதல் 1970கள் வரை இந்தியத் திரைப்பட பின்னணி இசையில் அவர் ஆதிக்கம் செலுத்தினார்
இவர் டெல்லியில் ஒரு சிறிய நடுத்தர வகுப்பு பஞ்சாபி குடும்பத்தில் பொறியாளரான ஜோராவார் சந்த் மத்தூர் மற்றும் சந்த் ராணி இருவருக்கும் மகனாகப் பிறந்தார். இவரது குடும்பத்தில் பிறந்த பத்து குழந்தைகளில் முகேஷ் ஆறாவது குழந்தையாவார். முகேஷின் சகோதரி சுந்தர் பியாரிக்கு சொல்லிக்கொடுக்க வந்த இசையாசிரியர் பக்கத்து அறையில் இருந்து அதை கேட்டுக்கொண்டிருக்கும் முகேஷின் ஆர்வத்தைக் கண்டார். இவருக்கு பரமேஷ்வரி தாஸ் என்ற இளைய சகோதரர் இருக்கிறார். பொது பணிகளின் டெல்லித் துறையில் சுருக்கமாக வேலை செய்வதற்காக முகேஷ் 10வது வகுப்பிற்குப் பிறகு பள்ளிப் படிப்பை விடுத்தார். டெல்லியில் அவர் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது குரல் பதிவுகளை செய்து முகேஷ் சோதனை செய்து பார்த்தார். பின்னர் அவரது பாடும் திறமைகளை சிறிது சிறிதாக வளர்த்துக்கொண்டார்.

முகேஷின் தனது சகோதரியின் திருமணத்தில் பாடியபோது அவரது குரலானது தூரத்து உறவினரான மோதிலால் மூலமாக கவனிக்கப்பட்டது. மோதிலால் அவரை பம்பாய்க்கு தன்னுடன் அழைத்துச் சென்று தங்க வைத்து பண்டிட் ஜெகனாத் பிரசாத்தை முகேஷிற்கு பாட்டு வகுப்பிற்கு ஏற்பாடு செய்தார். இந்த சமயத்தில் நிர்தோஷ் (இன்னொசென்ட்) (1941) என்ற இந்தித் திரைப்படத்தில் ஒரு பாத்திரத்தை முகேஷ் முயன்று பெற்றார். நிர்தோஷிற்காக ஒரு பாடும் நடிகராக தில் ஹீ புஜ்ஹா ஹுவா ஹோ தூ என்ற அவரது முதல் பாடலைப் பாடினார். முகேஷ் அவரது முதல் பின்னணிப் பாடகர் வாய்ப்பை அனில் பிவாஸால் இசையமைக்கப்பட்டு ஆஹ் சிட்டாபூரி (பர்ஸ்ட் லுக்) மூலமாக பாடல்கள் எழுதப்பட்டு நடிகர் மோதிலாலுக்காகவே 1945 ஆம் ஆண்டில் வெளியான பெஹ்லி நசர் திரைப்படத்தின் மூலமாகப் பெற்றார். அவரது முதல் பாடலானது இந்தித் திரைப்படமான தில் ஜல்டா ஹை டூ ஹல்னே தீ (உங்களது நெஞ்சு எரிந்தால், எரியட்டும் விடுங்கள்) திரைப்படத்திற்காக பாடினார். தற்செயலாய் இப்பாடல் மோதிலால் படமாக்கப்பட்டது.
இவர் கே. எல். செய்காலின் மிகப்பெரிய ரசிகர் ஆவார். அவரது ஆரம்பகாலங்களில் அந்தப் பாடகரின் குரலை ஒத்தே இவரும் பாடினார். உண்மையில் தில் ஜல்டா ஹை டூ ஜல்னே தீ பாடலை கே.எல். செய்கால் கேட்டபோது அவர் கூறியதாவது, “இது அந்நியமாக உள்ளது, அந்தப்பாடலை பாடுவதற்கு என்னால் நினைவுகொள்ள முடியவில்லை” என்றார்.
1950கள் மற்றும் 1960களில் பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர்/இயக்குனரான ராஜ் கபூருக்கு பின்னணிப் பாடகராக பாடலைப் பாடியதற்காக முகேஷ் புகழ்பெற்றார்.

1974 ஆம் ஆண்டில் ரஜ்னிகாந்தா (1974) திரைப்படத்தில் கெயின் பார் யோன் பி தேக்கா ஹை பாடலுக்காக சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருதை முகேஷ் பெற்றார். அனாரி (1959) திரைப்படத்தில் சப் குச் சீக்ஹா என்ற பாடல், பெஹ்சான் (1970) திரைப்படத்தில் சப்சே படா நாதன் வஹி ஹை என்ற பாடல், பீ இமான் (1972) திரைப்படத்தில் ஜெய் போலோ என்ற பாடல் மற்றும் கபி கபீ (1976) திரைப்படத்தில் கபி கபீ மெரே தில் மெயின் என்ற பாடல் ஆகியவற்றிற்காக ஃபிலிம்பேர் விருதுகளைப் பெற்றார்.
27 ஆகஸ்ட் 1976 அன்று, அமெரிக்காவில் மிச்சிகனில் உள்ள டெட்ரோய்ட்டில் முகேஷ் நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் சென்ற போது மாரடைப்பால் இறந்தார். லதா மங்கேஷ்கர் மூலமாக அவரது உடல் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. பல புகழ்பெற்ற நடிகர்கள், இந்திய திரைப்படத்துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் போன்றோர் இறந்த பாடகரின் சவ ஊர்வலம் நடந்த இடத்தில் அஞ்சலி செலுத்தினர். ராஜ் கபூருக்கு அவரது இறப்புச் செய்தி சென்றடைந்த போது, “நான் என் குரலை இழந்து விட்டேன்” எனக் கூறினார். ராஜ் கபூரின் திரைப்படங்களில் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்த பாடல்களுக்கு முகேஷின் குரல் (பின்னனிப் பாடகராக) மறக்கமுடியாத தொடர்பு மற்றும் காலவரையில்லாத சான்றாகவும் அமைந்தது.
முகேஷின் இறப்பிற்குப் பிறகு தரம் வீர், அமர் அக்பர் அந்தோனி, கெல் கிலாடி கா, தரிந்தா மற்றும் சாந்தி சோனா போன்ற திரைப்படங்களுடன் 1977 ஆம் ஆண்டில் அவரது புதிய வெளியிடப்படாத பாடல்கள் வெளியாயின. 1978 ஆம் ஆண்டில் முகேஷின் ஏராளமான பாடல்களைக் கொண்ட அஹுதி, பரமாத்மா, தும்ஹாரி கசம் மற்றும் சத்யம் ஷிவம் சுந்தரம் போன்ற திரைப்படங்கள் வெளியாயின. இதில் முகேஷ் இறுதியாகப் பாடிய “சன்சல் ஷீட்டல் நிர்மல் கோமல்” என்ற பாடல் இடம் பெற்றிருந்தது. 1980 ஆம் ஆண்டுகளில் இருந்து, தாமதமாக வெளியான திரைப்படங்களான ஷிட்டன் முஜரிம், பிரேமிக்கா, பத்தார் செ தக்கர் (1980), சன்ஞ் கி பேலா, மைலா ஆன்சல் (1981), அரோஹி (1982), சோர் மந்தாலி (1983), நிர்லஜ் (1985), லவ் அண்ட் காட் (1986), ஷுபா சிண்டக் (1989), மற்றும் அவரது கடைசியான வெளியீடாக அறியப்படும் சந்த் கிரஹன் (1997) போன்ற திரைப்படங்களில் முகேஷின் பாடல்கள் இடம்பெற்றிருந்தன.
