
மம்முட்டி நான்கு தடவைகள் இந்திய தேசிய விருது பெற்ற நடிகர், இயக்குநர் ஆவார். இவர் மலையாளம் தவிர இந்தி, தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கேரளாவில் ஒரு பிரபல நடிகராவார். இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதை 1998 இல் பெற்றார். அவரது வாழ்வில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக, முன்னணி நடிகராக 300 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.
மம்மூட்டி பல முக்கிய விருதுகளை அவரது நடிப்புத் திறமைக்காகப் பெற்றுள்ளார். அவற்றில் சிறந்த நடிகர் பிரிவில் அவர் பெற்ற மூன்று சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகள், நான்கு மாநில விருதுகள் மற்றும் எட்டு பிலிம்பேர் விருதுகள் ஆகியவை அடங்கும். 1998 இல், இந்தியத் திரைப்படத்துறைக்கு அவர் அளித்த மிகப்பெரிய பங்களிப்பிற்காக இந்திய அரசாங்கம் அவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவப்படுத்தியது.
கைராலி டிவி, பீபிள் டிவி மற்றும் வீ டிவி போன்ற மலையாள தொலைக்காட்சி அலைவரிசைகளை நடத்தும் மலையாள தகவல்தொடர்புகளின் தலைவர் பொறுப்பிலும் மம்மூட்டி இருக்கின்றார். வனிதா பத்திரிக்கை அதன் வாசகர்களிடையே நடத்திய ஆய்வின் பிறகு மம்மூட்டியை மிகவும் கவர்ச்சியான நடிகராகத் தேர்ந்தெடுத்தது. மும்மூட்டி, கேரளா முழுவதும் மனிதநேய செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார், மேலும் அக்ஷயா திட்டத்தின் நல்லெண்ணத் தூதுவராகவும் இருக்கின்றார்.

மம்மூட்டி அவர்கள் இந்தியாவின் பழைய திருவாங்கூர்-கொச்சின் மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கம் அருகில் ஒரு நடுத்தர முஸ்லீம் குடும்பத்தில் 7 செப்டம்பர் 1949 அன்று பிறந்தார், இவரது தந்தை இஸ்மாயில் ஒரு விவசாயி மற்றும் தாய் பாத்திமா இல்லத்தரசி ஆவர். அவரது உடன்பிறப்புகளுடன் அவர் வைக்கம் அருகிலுள்ள சேம்பு என்னும் இடத்தில் வளர்ந்தார். அவர் உயர்நிலைப் பள்ளிக்கல்வியை (பட்டப்படிப்புக்கு முந்தையது) கொச்சியிலுள்ள மகாராஜாஸ் கல்லூரியில் முடித்தார், அதன் பிறகு எர்ணாகுளம் அரசு சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றார். அவர் மஞ்சேரியில் இரண்டு ஆண்டுகள் சட்டப் பயிற்சியும் எடுத்தார். அவர் சல்பாத் என்பவரை 1980 இல் மணந்தார், இவர்களுக்கு சுருமி என்ற மகளும் தல்குயர் சல்மான் என்ற மகனும் உள்ளனர்.
மம்மூட்டி, பல ஆண்டுகளில் பல்வேறு வெளியீடுகளில் அவர் எழுதிய சிறு கட்டுரைகளின் தொகுப்பான காழ்ச்சப்பாடு ((பெர்ஸ்பெக்டிவ் ) என்ற பெயரில் ஏறத்தாழ மொழிமாற்றம் செய்தார்) என்ற தனது முதல் புத்தகத்துடன் எழுத்தாளராக மாறினார்.
