காதல், கொலை, ஆவி… திகில் திருப்பங்களால் மிரளவைக்கும் ‘கருப்பட்டி’ – ஐந்தாவது படைப்புடன் இயக்குநர் பிரபு ராமானுஜம்!
காதல், கொலை, ஆவி... திகில் திருப்பங்களால் மிரளவைக்கும் ‘கருப்பட்டி’ – ஐந்தாவது படைப்புடன் இயக்குநர் பிரபு ராமானுஜம்!
காதல், மர்மம், திகில் மற்றும் ஆக்சன் என அனைத்து அம்சங்களையும் ஒருங்கே இணைத்து உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘கருப்பட்டி’. எதிர்பாராத திருப்பங்களும், பரபரப்பான திரைக்கதையும் கொண்ட இந்த திரைப்படம் தற்போது இறுதிக்கட்ட பணிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கிராமத்து பின்னணியில் அமைந்துள்ள இப்படத்தின் கதை, உணர்வுப்பூர்வமான காதலுடன் தொடங்கி, அதிர்ச்சியூட்டும் மர்மங்களின் வழியாக திகில் பயணமாக மாறுகிறது. கொளத்தூர் கிராமத்தில் தாயுடன் வசித்து வரும் கருப்பட்டி என்ற இளைஞன், அதே ஊரில் தனது தந்தையுடன் வாழும் பவானியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறான். ஆனால் திருமணமான சில நாட்களிலேயே பவானி மர்மமான முறையில் உயிரிழக்கிறார்.
அவரது மரணத்திற்குப் பிறகு, பவானி ஆவியாக ...









