
பைரவா விஜய் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் படம் இதன் வெற்றியை ருசிக்க ரசிகர்கள் துடித்து கொண்டுள்ளனர். ஆனால் விஜய் ரசிகர்களுக்கு மட்டும் இல்லை படத்தின் தயாரிப்பாளர் மற்றும் படத்தை வாங்கிய வினியோகிஸ்தர்கள் முதல் அச்சத்தில் உள்ளனர் காரணம்?
படம் பொங்கலுக்கு பிரமாண்டமாக வரவுள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.படத்தின் வியாபாரமும் பல கோடிகளுக்கு விற்றுள்ளது, ஆனால், பிரச்சனையே இங்கு தான்.
ஏனெனில் விஜய் படம் எப்படி இருந்தாலும் போட்ட பணத்தை எடுத்துவிடலாம், அதில் எந்த பயமும் இல்லை.
ஆனால், படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்தால் 30% வரியாக போய்விடும், அதனால், படத்தின் சென்ஸார் சான்றிதழை நினைத்து தான் விநியோகஸ்தர்கள் கடும் அச்சத்தில் இருக்கிறார்களாம்.
படம் வேறு ஆளுங்கட்சிக்கு போட்டியாக உள்ள சேனலுக்கு விற்றதாக கிசுகிசுக்கப்படுகின்றது
