Friday, March 29
Shadow

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி மற்றும் ராஷ்மிகா நடிக்கும் படத்தின் தலைப்பு என்ன தெரியுமா

தமிழ் சினிமாவில் தரமான படங்களை தயாரிக்கும் நிறுவனம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம் அது ட்ரிம் வாரியார் பிக்சர்ஸ் என்று காரணம் இவர்கள் தயாரிக்கும் படம் வெற்றி படங்கள் மட்டும் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்கும் படங்களாக இருக்கும் அந்த வழியில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வெளியாகி மாபெரும் வெற்றி படம் மான்ஸ்டர் இந்த வெற்றிக்கு அடுத்து இவர்களின்படைப்பு என்.ஜி.கே. இதை தொடர்ந்து கார்த்தி நடிக்கும் படம் இந்த படத்தை பற்றிய தகவலை பார்ப்போம்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடித்து வரும் புதிய திரைப்படத்தின் தலைப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கவிருக்கும் கார்த்தியின் 19வது திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

எமோஷன், ஆக்‌ஷன் கலந்த காமெடி திரைப்படமாக உருவாகி வரும் இப்படம், கார்த்தியின் ‘சிறுத்தை’, ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படங்களை போன்று குடும்பமாக ரசிகர்கள் பார்த்து ரசிக்கும்படி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக, தெலுங்கில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். விவேக்-மெர்வின் இசையமைக்கும் இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில், எங்களுக்கு கிடைத்த தகவலின்படி இப்படத்திற்கு ‘சுல்தான்’ என தலைப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனிடையே, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வந்த ‘கைதி’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகளை முடித்த கார்த்தி, ‘சுல்தான்’ திரைப்படத்திலும், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஜோதிகா, சத்யராஜ், நிக்கிலா விமல் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார்.