Sunday, March 16
Shadow

‘பிக்பாஸ்’ காயத்ரி ரகுராம் மீது பாய்ந்த புகார்கள்… விரைவில் கைது ஆவாரா ?

பிக் பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் பிரச்னைகள் பூகம்பம் போல கிளம்பி கொண்டே இருக்கிறது இதற்கு முக்கிய காரணம் காயத்திரி ரகுராம் மற்றும் ஆர்த்தி என்று தான் சொல்லணும் இந்த இவர்களால் நாள்தோறும் ஒரு பிரச்சனை வந்த வண்ணம் உள்ளது குறிப்பகா காயத்ரிரகுராம் தான் முக்கிய காரணம், சமீபத்தில் அவர் பேசிய சேரி பிஹேவியர்’ மேலும் பிரச்சனைக்கு காரணமாக அமைந்துள்ளது என்று தான் சொல்லணும்.

சேரி பிஹேவியர்’ என்ற வார்த்தை, பல்வேறு தரப்பிலும் பலத்த சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது. 10.07.2017 அன்று ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் ‘புரொமோ’ வீடியோவில் நடிகை ஓவியாவைத் திட்டுவதற்காக ‘சேரி பிஹேவியர்’ என்ற வார்த்தையை நடிகையும் பி.ஜே.பி. பிரமுகருமான நடிகை காயத்ரி ரகுராம் பயன்படுத்தியிருந்தார். இது “சேரி மக்களையும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் இழிவுபடுத்தும் விதமாக உள்ளது” எனப் பல்வேறு அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. இந்நிலையில், இதுதொடர்பாகப் பெருநகர சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு இளைஞர் மாணவர் கூட்டமைப்பு (TYSF) மற்றும் மாணவர் இந்தியா சார்பில் புகார் மனு

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் நடிகை காயத்ரி ரகுராம் பேசிய ‘சேரி பிஹேவியர்’ என்ற வார்த்தை, பல்வேறு தரப்பிலும் பலத்த சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது. 10.07.2017 அன்று ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் ‘புரொமோ’ வீடியோவில் நடிகை ஓவியாவைத் திட்டுவதற்காக ‘சேரி பிஹேவியர்’ என்ற வார்த்தையை நடிகையும் பி.ஜே.பி. பிரமுகருமான நடிகை காயத்ரி ரகுராம் பயன்படுத்தியிருந்தார். இது “சேரி மக்களையும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் இழிவுபடுத்தும் விதமாக உள்ளது” எனப் பல்வேறு அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. இந்நிலையில், இதுதொடர்பாகப் பெருநகர சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு இளைஞர் மாணவர் கூட்டமைப்பு (TYSF) மற்றும் மாணவர் இந்தியா சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.


கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குகனிடம் பேசியபோது, “விஜய் டி.வி-யில், காயத்ரி ரகுராம் பேசிய அந்த புரொமோவை பலமுறை ஒளிபரப்பினார்கள். ஏற்கெனவே, ஒதுக்குப்புறமான பகுதிகளில் வாழ்ந்துவரும் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மீது மக்கள் மத்தியில் தவறான பார்வை பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல கோடி மக்கள் பார்க்கும் ஒரு பொதுநிகழ்ச்சியில் சினிமாத்துறையில் உள்ள ஒருவர், பொறுப்பற்ற முறையில் இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினால் அதைப் பார்க்கும் பெருவாரியான பொதுமக்கள் மனதிலும் இது பதிந்துவிடும். இவ்வாறான வார்த்தைகளைப் பயன்படுத்துவது உளவியல்ரீதியாக மக்களைப் பாதிக்கும் வகையில் இருக்கிறது.

இதுதொடர்பாக விஜய் தொலைக்காட்சிக்கு தொடர்புகொண்டு கேட்டபோது, யாரும் முறையான பதில் அளிக்கவில்லை. இப்படி ஆணவப்போக்கில் வார்த்தைகளைத் திட்டமிட்டு பயன்படுத்திய காயத்ரி ரகுராம் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் மற்றும் தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்தோம். எங்களை நேரில் அழைத்துப் பேசிய காவல்துறை ஆணையர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார். விஜய் தொலைக்காட்சியும் இந்தச் செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்றார்.

“பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தடைசெய்து, அதைத் தொகுத்து வழங்கிவரும் நடிகர் கமல்ஹாசன் மற்றும் அதில் பங்கேற்ற நடிகர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்” என இந்து மக்கள் கட்சி சார்பில் ஏற்கெனவே பெருநகர சென்னை காவல் ஆணையரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகர்கள் அணியும் உடைகள் மிகவும் ஆபாசமாக உள்ளதாகவும், அது நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களின் மனநிலையைச் சீரழித்துவிடும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

Leave a Reply