Sunday, June 28
Shadow

கண்ட இடத்தில் கை வைத்த சினேகன் – சுஜா பரபரப்பு பாலியல் புகார்!

கட்டிபிடி கலாச்சாரத்தால் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சினேகன், அந்த சர்ச்சையின் வடு மறைவதற்குள் அவருக்கு விழி புதுங்கிவிட்டது. இதற்கிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர், தலைவன் ரேஞ்சிக்கு கெத்தாக இருந்த நிலையில், தற்போது போட்டி இறுதி நிலையை எட்டுகையில், சினேகனின் உண்மையான முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதற்காக, வெறி பிடித்தவரைப் போல நடந்துக் கொள்ளும் சினேகன் சக போட்டியாளர்களை அடிக்க பாய்வதும், அவர்களை கேவலமாக திட்டுவதும் என்று மட்டும் இல்லாமல், பெண் போட்டியாளர்கள் மீது கண்ட இடத்தில் கை வைத்து தடவுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இது குறித்து கணேஷிடம் சுஜா கூறுகையில், “முன்பு பிந்து ஏன் கேமில் இருந்து சென்றார் என்று எனக்கு தற்போது புரிகிறது. சினேகன் ரொம்ப ஆவேசமாக விளையாடினார். ஹரிஷை போட்டு தரதரவென இழுத்தார். அது தப்பு.

கேமில் இப்படி எல்லாம் செய்யக் கூடாது. வேண்டும் என்றே மைக்கை பிடித்து அறுத்தார் சினேகன். அதனால் நான் அவரை இழுத்தபோது உன்னை அடித்துவிடுவேன் என்றார். அவர் அடிச்சா நான் சும்மா இருப்பேனா? அவருக்கு 2 கை இருந்தால் எனக்கு இல்லையா? என்னை எல்லாம் அடிக்க முடியாது. கேம் இல்லை சண்டை தான் நடந்தது.

விளையாடும்போது நீங்கள் எப்படி பிந்து மீது கண்ட இடத்தில் கை படக்கூடாது என்று கவனமாக இருந்தீர்கள். ஆனால் சினேகன் அப்படி இல்லை, என்று சுஜா கூறினார்.

சுஜா வாருணியின் இந்த குற்றச்சாட்டால் ஏற்கனவே டேமேஜான சினேகனின் பெயர், இப்போது பெரிய அளவில் டேமேஜாகியுள்ளது.

இந்த சினேகனுக்கு வக்காலத்து வாங்கும் ஆரவ் இவர் ஏற்கனவே இவரின் புகழ் உலகம் அறிந்த விஷயம் ஒரு பெண்ணை படுமோசமாக நடத்தும் சினேகனுக்கு அதரவாக இன்றைய நிகழ்ச்சியிலும் ஆரவ் அதரவு கொடுக்கிறார்,

Leave a Reply