
கடந்த சில நாட்களாக கேரளா முழுக்க பெயது வரும் கன மழையால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாத்திக்கப்பட்டிருப்பதோடு பலர் மரணமும் அடைந்துள்ளார். அதிலும் ஆலுவா, பாலக்காடு, மலப்புறம், வயநாடு, இடுக்கி போன்ற இடங்களில் கட்டுக்கங்காத வெள்ளப் பெருக்கால் பலர் தங்களது வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். கேரள அரசும், மத்திய அரசும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு செயல்பட்டு வருகிறது என்றாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்த்வர்களும், பொது மக்களும் உதவிகள் செய்து வருகின்றனர். அதே நேரம் திரையுலகத்தை சேர்ந்தவர்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கேரள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மலையாள நடிகர் சங்கம் சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதி நேற்று முன் தினம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இப்போது நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் இணைந்து கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய் நிதி வழங்க முடிவு செய்துள்ளனர். இந்த தகவலை சூர்யா மற்றும் கார்த்தி சார்பில் வெளியிடப்பட்டுள்ள்து.
