என் ‘பார்பி கேர்ள்’ இமேஜ்யை உடைக்கும் அடங்கமறு – ராஷி கண்ணா.
பேரழகு என்று சொல்வதோ அல்லது ஃபேன்ஸி நாயகி என்று சொல்வதிலோ ராஷி கண்ணாவுக்கு விருப்பமில்லை. வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் ஒவ்வொரு படத்திலும் தனது எல்லையை விரிவுபடுத்திக் கொண்டே போகிறார். இமைக்கா நொடிகள் படத்தில் ஒரு அழகான கதாபாத்திரத்தைத் தொடர்ந்து, தனது இரண்டாவது படமான ஜெயம் ரவியின் 'அடங்க மறு' ரிலீஸுக்கு தயாராகி வருகிறார் ராஷி கண்ணா. தனது ஹீரோ ஜெயம் ரவி மற்றும் இயக்குனர் கார்த்திக் தங்கவேல் ஆகியோரை பற்றி பேசுகிறார் நாயகி ராஷி கண்ணா.
"நான் ஒரு நடிகையாக விரும்பிய முதல் மற்றும் முன்னணி விஷயம் 'பார்பி கேர்ள்' என்ற இமேஜை உடைத்து, ஒரு நல்ல அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது தான். அது இந்த படத்தில் நடந்திருக்கிறது. உண்மையில், அடங்க மறுவில் என் கதாபாத்திரம் வெறுமனே வந்து செல்வது போல இல்லாமல், படம் முழுக்க பயணிக்கும் ஒரு முழுமையான, வலுவான கதாபாத்திரம். என்னுடைய முழு திறமைக...

