2015 மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டபோது அஜித் பெயரை சொன்னதும் திரண்ட இளைஞர்கள் மனம் திறக்கும் பிரபல நடிகர்
ஆர்.ஜே,பாலாஜி கதை, திரைக்கதை எழுதி நடித்துள்ள படம் எல்கேஜி. இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு நடிகர் மயில்சாமி பேசினார். அப்போது நடிகர் சித்தார்த், பாலாஜி இருவரும் இணைந்து சென்னை பெருவெள்ளத்தின் போது பணியாற்றியதை வியந்து பாராட்டினார்.
அந்தநேரத்தில் தனக்கு நடந்த சம்பவம் ஒன்றையும் விவரித்தார். “சென்னை நகரம் 2015-ம் ஆண்டு வெள்ள நீரால் சூழ்ந்து பாதிப்புக்குள்ளான போது சாலிகிராமம், தசரதபுரம், விருகம்பாக்கம் பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டேன். எனக்கு துணையாக சில இளைஞர்களை ஒருங்கிணைத்தேன். அவர்களிடம் அப்போது நடிகர் அஜித் குமாருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துத் தருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்தேன்.
அதன்பின்னர் 20 பேரும் எந்தவிதமான எதிர்பார்ப்புமின்றி 13 நாட்கள் என்னுடன் நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். இன்னும் நான் அஜித்தை சந்திக்கவில்லை. சந்திக்கும் போது அவர்களு...
