‘மொத ராத்திரி’ இறுதிக்கட்டத்தை எட்டியது… படப்பிடிப்பு நிறைவு; அடுத்த கட்ட அப்டேட்டுகளுக்கு தயாராகும் படக்குழு
'மொத ராத்திரி' இறுதிக்கட்டத்தை எட்டியது... படப்பிடிப்பு நிறைவு; அடுத்த கட்ட அப்டேட்டுகளுக்கு தயாராகும் படக்குழு
முதல்பட இயக்குநர் ராஜா கருப்பசாமியின் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'மொத ராத்திரி' திரைப்படம் முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. படத்தின் முழு படப்பிடிப்பும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
பான் இந்திய அளவில் பல வெற்றிப் படங்களை வழங்கிய மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம், அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், தற்போது படத்தின் அனைத்து காட்சிகளும் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தப் படத்தில் ரிஷிகாந்த் ...

